Wednesday, March 5, 2014

பொடுகு என்றால் என்ன ?

*** பொடுகு என்றால் என்ன ?

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

*பொடுகு ஏன் வருகிறது?

1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்

5. "பிடி ரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

* பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்."பிடிரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

20.ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும் with - Ganesharajah Krishnasamy .

Friday, February 28, 2014

கரிகால சோழன்


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி….

Thursday, February 20, 2014

ஜெய் சிங் மகராஜர் - தமிழன்


ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய் சிங் மகராஜர், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார். உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித்திறமைகளை அறிந்துகொள்ள விரும்பினார். ஆனால் அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி, வெளியே போக சொல்லிவிட்டார். மனமுடைந்த ஜெய் சிங் மகராஜர், தன் விடுதி அறைக்கு வந்து, தன வேலை ஆட்களை காட்சியகத்திற்கு சென்று, ஆழ்வார் நகரத்து ராஜா உங்கள் வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார் என்று கூறி வரச்செய்தார். சிறிது நேரம் கழித்து, தன் ராஜ உடையில், கம்பீரமான நடையுடன் ரோல்ஸ் ராய்ஸ் காட்சியகத்திற்கு வந்தார், அங்கே அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் பெரும் மரியாதைய்டன் நடந்தது. அங்குள்ள அனைவரும் பணிந்து மன்னரை வரவேற்றனர். அங்குள்ள ஆறு கார்களையும் மன்னர் உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார். [தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு] மன்னர் பின்பு இந்தியா வந்தடைந்ததும், அந்த ஆறு கார்களையும் மாநகராட்சி துறைக்கு அனுப்பி, இந்த கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு குறைய ஆரம்பித்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர். "இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரை தான் நீ வைத்திருக்காயா" என்று கிண்டல் செய்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் விற்பனை குறையத் தொடங்கியது. மேலும் அவர்களது வருமானம் பெரிதும் சரிந்தது. உடனே அந்த நிறுவனம், மன்னிப்பு கோரியும், தவறை உணர்ந்ததாகவும், குப்பை அள்ளுவதை நிறுத்தும் படியும், மன்னருக்கு தந்தி அனுப்பப்பட்டது. அதுமட்டுமில்லாமல், மன்னருக்கு ஆறு கார்கள் பணம் பெற்றுக்கொள்ளாமல் அனுப்பப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாடம் கற்றுகொண்டதை அறிந்த மன்னர், உடனடியாக அவைகளை நிறுத்தி வேறு விடயத்திற்காக பயன்படுத்திக் கொண்டார். இந்த இந்திய மாமன்னரை உலகம் மறவாமல் அனைவரும் இருக்க பகிரவும்...

இந்தியாவின் கேடுகெட்ட அரசியலால் மறைக்கப்பட்ட வரலாறு!

இந்தியாவின் கேடுகெட்ட அரசியலால் மறைக்கப்பட்ட #வரலாறு!

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்க வேண்டிய #நேதாஜி..., உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறை ஆட்சி செய்தவர்கள் முடித்துவிட்டார்கள்.

ஜவஹர்லால் நேரு அவர்கள் 1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி மரணமடைந்தபோது, அவரது உடலுக்கு நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் அவர்கள்#அஞ்சலிசெலுத்தும்போது எடுக்கப்பட்ட#புகைப்படம்இங்கு பகிர்ந்துள்ளோம்..!

1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன!
ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை, உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன.
அப்போதைய ஆட்சியாளர்களின் சதியால் இந்தியாவின் ஒரு பகுதி வரலாரே மறைக்க பட்டு இருக்கிறது.இவரை இறந்ததாக#செய்திவெளியிட்டு மறைக்க என்ன காரணம்?
ஆட்சியில் அமரும் தகுதி இவருக்கு இருந்ததாலா!!?

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதன்

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்

1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....

2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்

3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை

4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது

5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....

6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....

7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது

(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது

(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது

8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....

9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....

10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க

நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது

எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :

1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது

2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்

3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்

4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......

5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்

6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே........!

Wednesday, February 19, 2014

ஆச்சரியப்படும் உண்மைகள்

ஆச்சரியப்படும் உண்மைகள்:

1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.

2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.

3. டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.

4. சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்.

5. யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்.

6. ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.

67. 99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.

8. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்ஆய்வின் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம்.

9. கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்

10. வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதாம்...

நளினியின் காதல் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன: முருகன் உருக்கமான பேட்டி Her love and memories are the only ones poignant interview Murugan

நளினியின் காதல் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன: முருகன் உருக்கமான பேட்டி Her love and memories are the only ones poignant interview Murugan 

சென்னை, பிப். 19–ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக சிறையில் வாடிய முருகன்-நளினியின் காதல் கதை மிகவும் சோகமயமானது.1991–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன் முதலாக சந்தித்த இருவரும் 4 மாதத்துக்குள்ளாகவே ஜுன் மாதத்தில் ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று விட்டனர்.இவர்களின் இல்லற வாழ்வின் சாட்சியாக பிறந்த அரித்ராவுக்கு 22 வயதாகிறது. அவர் லண்டனில் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், வேலூர் சிறையில் இருக்கும் முருகன் தனது காதல் வாழ்க்கை பற்றி மனம் திறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–9 சகோதர-சகோதரிகளுடன் யாழ்ப்பாணம் இத்தாவில் பிறந்த நான், 1987–ம் ஆண்டு மூத்த அண்ணனைத் தொடர்ந்து புலிகள் அமைப்பில் சேர்ந்தேன். வீட்டில் எனக்கு வைக்கப்பட்ட பெயர் ஸ்ரீகரன். புலிகள் அமைப்பில் வைக்கப் பட்ட பெயர் இந்து.எனது 19–ம் வயதில் 1991–ம் ஆண்டு ஜனவரியில் சென்னை வந்தேன். சென்னையில் எனக்கு நானே சூட்டிக் கொண்ட பெயர் தாஸ்.இங்கு பாக்கியநாதன் என்ற தமிழ் ஆர்வலர் வீட்டில் தங்க வைக்கப் பட்டேன். பாக்கியநாதனின் அக்கா தான் நளினி. ஆனால், நான் அவர்களது வீட்டில் தங்கி இருந்த போது அவர், தனது தாயாருடன் கோபித்துக் கொண்டு தனது பெரியம்மா வீட்டில் இருந்தார்.எனது பிறந்ததினமான பிப்ரவரி 8–ந்தேதி முதன்முதலாக நளினியை நான் சந்தித்தேன். அவரைப் பார்த்தவுடன் இனம் புரியாத ஈர்ப்பு வந்தது. ஆனால், அதனைக் காதல் எனச் சொல்ல முடியாது.எனது பிறந்தநாளில் என்னுடன் வந்தவர்களுக்கு எளிமையான விருந்தளித்தார் நளினி. எப்போதுமே பிறந்தநாளைக் கொண்டாடியிராத எனக்கு அது புதிய அனுபவமாக இருந்தது.நளினியை தாயுடன் சேர்த்து வைப்பதற்காக அடிக்கடி சந்தித்தேன் . மார்ச் மாதம் பொதுக்கூட்டம் ஒன்றிற்காக மெரினா பீச் சென்றிருந்த போது, கூட்டமாக இருந்த சாலையைக் கடப்பதற்கு உதவினார் நளினி. அந்தப் பிடிப்பிலும், வார்த்தையிலும் அவ்வளவு பிரியம். அன்று வீடு வரை சேர்ந்தே நடந்து வந்தோம். எங்கள் காதலுக்கு இரு தரப்பிலும் அச்சாணி விழுந்த நாள் அது.காதல் உணர்வு எங்களை ஈர்த்து இருந்தாலும், நளினியின் எதிர்கால வாழ்வு குறித்து நான் கவலைப்பட்டேன். அந்தக் கவலைகளை ஏற்றுக் கொண்ட நளினி, அதற்கான காரணங்களை நிராகரித்தார். காதலில் உறுதியாக இருந்தார். 'உன்னோடு ஒருநாள் வாழ்ந்தாலும் போதும்' என்றார்.பெரிய கனவுகள், ஆசைகள் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்வின் மீது பெரும் தாகம் இருந்தது. அதை எப்படி அமைப்புக்குச் சொல்வது, நளினி குடும்பம் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணங்களுக்கு இடையே நாட்கள் ஓடியது.ஒரு பெண்ணாக பிற உயிர்கள் மீது கரிசனத்தோடு இருந்தாரேத் தவிர ஈழப் போராட்டத்துக்கும் நளினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு போராளியைக் காதலித்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் நளினி செய்யவில்லை.இந்நிலையில், எனக்காக, என் மீதான காதலுக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தணு, சுபா இருவரையும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார் நளினி.ஏப்ரல் 22–ந்தேதி திருப்பதியில் வைத்து நளினியைத் திருமணம் செய்து கொண்டேன். பல்வேறு நெருக்கடிகள் காரணமாக எங்கள் திருமணத்தை ரகசியமாக வைக்க வேண்டியிருந்தது.இந்நிலையில், மே21–ந் தேதி ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், அதிர்ச்சியும் குழப்பமும் சரிவிகிதத்தில் என்னைத் தாக்கின.ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் தாணு படம் பத்திரிக்கைகளில் வெளியானபோது பீதியில் நானும், நளினியும் உறைந்து விட்டோம்.நளினி தம்பி பாக்கியநாதனை சி.பி.ஐ கைது செய்தது. நானும் நளினியும் மீண்டும் திருப்பதி சென்றோம். தற்கொலை செய்து கொள்ள நானும் நளினியும் முடிவு செய்திருந்தோம்.என்னிடம் இருந்த சயனைடு குப்பி தண்ணீரில் நனைந்து பாழாகி விட்டதால், புதிய சயனைடு குப்பி கேட்டிருந்தேன்.ஆனால், திருப்பதியில் நளினி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. அதனால் மீண்டும் விழுப்புரம் திரும்பினோம். சைதாப் பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கிய எங்களை கைது செய்தனர். சில நாட்களில் எனக்கு, 'மொட்டைத் தலை' முருகன் என பெயர் வைத்தார்கள். ரொம்ப வேடிக்கையான பெயர் தான்.விசாரணை கைதியாக செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது நளினி ஐந்து மாதக் கர்ப்பிணி. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நளினியை நான் பார்த்த போது, நடக்க முடியாமல் தரையில் தவழ்ந்து வந்தார். 'எனக்கு சாப்பாடு பத்தலை. ரொம்ப பசிக்குது. இப்படியே விட்டா என் பிள்ளை செத்துப் போகும்' எனக் கதறினார்.சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து நளினிக்கு போதிய உணவு கிடைக்கச் செய்தேன். குறித்த தேதிக்கு முன்னதாகவே நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பலவீனமாக இருந்தார்கள். மாற்றுத் துணியோ, உணவோ எதுவுமே எங்களுக்கு இல்லை.ஒவ்வோரு இரவிலும் நளினி அனுபவித்த அந்தத் துன்பம் என்னால் வந்தது என்று இப்போதும் நினைத்து நினைத்து அழுகிறேன்.சிறை அதிகாரி ஒருவர் நளினியின் நிலையைப் பார்த்து குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுத்தார். சிறைக்கு வந்த பேரறிவாளனின் அப்பா குயில்தாசன் குழந்தை அரித்ராவுக்கு கொசுவலை வாங்கிக் கொடுத்தார். கேட்க அது சாதாரணமாக இருக்கும். ஆனால், அது அப்போது மிகப் பெரிய உதவி.அரித்ராவுக்கு இரண்டரை வயதான போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றினார்கள். அங்கே, பசு மாட்டை ஆச்சரியமாகப் பார்த்த அரித்ராவின் எதிர்காலம் குறித்து நளினிக்கு அச்சம் ஏற்பட்டது.எங்கள் வழக்கிலேயே சக சிறைவாசியாக இருந்த சுசீந்திரனின் தாயார் அரித்ராவை கோவையில் வைத்து வளர்த்தார். சில ஆண்டுகள் கழித்து ஈழம் சென்ற அரித்ரா, பிறகு லண்டன் சென்றாள். தற்போது அவளுக்கு வயது 22.இன்றும் பாதுகாப்பு என்ற பெயரில் தனிமைச் சிறையில் தான் நானும், நளினியும் வாழ்ந்து வருகிறோம். ஆறு அடி தூர இடைவெளியில் 10 பேர் சூழ்ந்து நிற்க தான் நானும், நளினியும் பேசிக் கொள்வோம்.நீண்ட கால சிறைவாசிகளுக்கு செவித்திறன் பாதிக்கப்படும். ஆம், எனக்கும், நளினிக்கும் செவித்திறன் பாதிப்பு உள்ளது. செவித்திறன் பாதிக்கப்பட்ட இருவர் ஆறு அடி இடைவெளியில் என்னப் பேசிக் கொள்ள முடியும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.வாழ்வின் எந்தச் சந்தோஷங்களையும் காணாத எனது வாழ்வில், ஒரு வானவில்லைப் போல மின்னி மறைந்த நளினியுடனான காதல் நினைவுகள் மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கின்றன.இவ்வாறு முருகன் கூறியுள்ளார்.... 

Popular Posts