Friday, February 28, 2014

கரிகால சோழன்


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி….

Thursday, February 20, 2014

ஜெய் சிங் மகராஜர் - தமிழன்


ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய் சிங் மகராஜர், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார். உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித்திறமைகளை அறிந்துகொள்ள விரும்பினார். ஆனால் அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி, வெளியே போக சொல்லிவிட்டார். மனமுடைந்த ஜெய் சிங் மகராஜர், தன் விடுதி அறைக்கு வந்து, தன வேலை ஆட்களை காட்சியகத்திற்கு சென்று, ஆழ்வார் நகரத்து ராஜா உங்கள் வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார் என்று கூறி வரச்செய்தார். சிறிது நேரம் கழித்து, தன் ராஜ உடையில், கம்பீரமான நடையுடன் ரோல்ஸ் ராய்ஸ் காட்சியகத்திற்கு வந்தார், அங்கே அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் பெரும் மரியாதைய்டன் நடந்தது. அங்குள்ள அனைவரும் பணிந்து மன்னரை வரவேற்றனர். அங்குள்ள ஆறு கார்களையும் மன்னர் உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார். [தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு] மன்னர் பின்பு இந்தியா வந்தடைந்ததும், அந்த ஆறு கார்களையும் மாநகராட்சி துறைக்கு அனுப்பி, இந்த கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு குறைய ஆரம்பித்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர். "இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரை தான் நீ வைத்திருக்காயா" என்று கிண்டல் செய்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் விற்பனை குறையத் தொடங்கியது. மேலும் அவர்களது வருமானம் பெரிதும் சரிந்தது. உடனே அந்த நிறுவனம், மன்னிப்பு கோரியும், தவறை உணர்ந்ததாகவும், குப்பை அள்ளுவதை நிறுத்தும் படியும், மன்னருக்கு தந்தி அனுப்பப்பட்டது. அதுமட்டுமில்லாமல், மன்னருக்கு ஆறு கார்கள் பணம் பெற்றுக்கொள்ளாமல் அனுப்பப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாடம் கற்றுகொண்டதை அறிந்த மன்னர், உடனடியாக அவைகளை நிறுத்தி வேறு விடயத்திற்காக பயன்படுத்திக் கொண்டார். இந்த இந்திய மாமன்னரை உலகம் மறவாமல் அனைவரும் இருக்க பகிரவும்...

இந்தியாவின் கேடுகெட்ட அரசியலால் மறைக்கப்பட்ட வரலாறு!

இந்தியாவின் கேடுகெட்ட அரசியலால் மறைக்கப்பட்ட #வரலாறு!

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்க வேண்டிய #நேதாஜி..., உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறை ஆட்சி செய்தவர்கள் முடித்துவிட்டார்கள்.

ஜவஹர்லால் நேரு அவர்கள் 1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி மரணமடைந்தபோது, அவரது உடலுக்கு நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் அவர்கள்#அஞ்சலிசெலுத்தும்போது எடுக்கப்பட்ட#புகைப்படம்இங்கு பகிர்ந்துள்ளோம்..!

1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன!
ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை, உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன.
அப்போதைய ஆட்சியாளர்களின் சதியால் இந்தியாவின் ஒரு பகுதி வரலாரே மறைக்க பட்டு இருக்கிறது.இவரை இறந்ததாக#செய்திவெளியிட்டு மறைக்க என்ன காரணம்?
ஆட்சியில் அமரும் தகுதி இவருக்கு இருந்ததாலா!!?

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதன்

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்

1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....

2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்

3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை

4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது

5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....

6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....

7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது

(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது

(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது

8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....

9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....

10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க

நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது

எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :

1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது

2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்

3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்

4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......

5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்

6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே........!

Wednesday, February 19, 2014

ஆச்சரியப்படும் உண்மைகள்

ஆச்சரியப்படும் உண்மைகள்:

1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.

2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.

3. டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.

4. சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்.

5. யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்.

6. ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.

67. 99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.

8. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்ஆய்வின் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம்.

9. கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்

10. வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதாம்...

நளினியின் காதல் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன: முருகன் உருக்கமான பேட்டி Her love and memories are the only ones poignant interview Murugan

நளினியின் காதல் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன: முருகன் உருக்கமான பேட்டி Her love and memories are the only ones poignant interview Murugan 

சென்னை, பிப். 19–ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக சிறையில் வாடிய முருகன்-நளினியின் காதல் கதை மிகவும் சோகமயமானது.1991–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன் முதலாக சந்தித்த இருவரும் 4 மாதத்துக்குள்ளாகவே ஜுன் மாதத்தில் ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று விட்டனர்.இவர்களின் இல்லற வாழ்வின் சாட்சியாக பிறந்த அரித்ராவுக்கு 22 வயதாகிறது. அவர் லண்டனில் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், வேலூர் சிறையில் இருக்கும் முருகன் தனது காதல் வாழ்க்கை பற்றி மனம் திறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–9 சகோதர-சகோதரிகளுடன் யாழ்ப்பாணம் இத்தாவில் பிறந்த நான், 1987–ம் ஆண்டு மூத்த அண்ணனைத் தொடர்ந்து புலிகள் அமைப்பில் சேர்ந்தேன். வீட்டில் எனக்கு வைக்கப்பட்ட பெயர் ஸ்ரீகரன். புலிகள் அமைப்பில் வைக்கப் பட்ட பெயர் இந்து.எனது 19–ம் வயதில் 1991–ம் ஆண்டு ஜனவரியில் சென்னை வந்தேன். சென்னையில் எனக்கு நானே சூட்டிக் கொண்ட பெயர் தாஸ்.இங்கு பாக்கியநாதன் என்ற தமிழ் ஆர்வலர் வீட்டில் தங்க வைக்கப் பட்டேன். பாக்கியநாதனின் அக்கா தான் நளினி. ஆனால், நான் அவர்களது வீட்டில் தங்கி இருந்த போது அவர், தனது தாயாருடன் கோபித்துக் கொண்டு தனது பெரியம்மா வீட்டில் இருந்தார்.எனது பிறந்ததினமான பிப்ரவரி 8–ந்தேதி முதன்முதலாக நளினியை நான் சந்தித்தேன். அவரைப் பார்த்தவுடன் இனம் புரியாத ஈர்ப்பு வந்தது. ஆனால், அதனைக் காதல் எனச் சொல்ல முடியாது.எனது பிறந்தநாளில் என்னுடன் வந்தவர்களுக்கு எளிமையான விருந்தளித்தார் நளினி. எப்போதுமே பிறந்தநாளைக் கொண்டாடியிராத எனக்கு அது புதிய அனுபவமாக இருந்தது.நளினியை தாயுடன் சேர்த்து வைப்பதற்காக அடிக்கடி சந்தித்தேன் . மார்ச் மாதம் பொதுக்கூட்டம் ஒன்றிற்காக மெரினா பீச் சென்றிருந்த போது, கூட்டமாக இருந்த சாலையைக் கடப்பதற்கு உதவினார் நளினி. அந்தப் பிடிப்பிலும், வார்த்தையிலும் அவ்வளவு பிரியம். அன்று வீடு வரை சேர்ந்தே நடந்து வந்தோம். எங்கள் காதலுக்கு இரு தரப்பிலும் அச்சாணி விழுந்த நாள் அது.காதல் உணர்வு எங்களை ஈர்த்து இருந்தாலும், நளினியின் எதிர்கால வாழ்வு குறித்து நான் கவலைப்பட்டேன். அந்தக் கவலைகளை ஏற்றுக் கொண்ட நளினி, அதற்கான காரணங்களை நிராகரித்தார். காதலில் உறுதியாக இருந்தார். 'உன்னோடு ஒருநாள் வாழ்ந்தாலும் போதும்' என்றார்.பெரிய கனவுகள், ஆசைகள் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்வின் மீது பெரும் தாகம் இருந்தது. அதை எப்படி அமைப்புக்குச் சொல்வது, நளினி குடும்பம் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணங்களுக்கு இடையே நாட்கள் ஓடியது.ஒரு பெண்ணாக பிற உயிர்கள் மீது கரிசனத்தோடு இருந்தாரேத் தவிர ஈழப் போராட்டத்துக்கும் நளினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு போராளியைக் காதலித்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் நளினி செய்யவில்லை.இந்நிலையில், எனக்காக, என் மீதான காதலுக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தணு, சுபா இருவரையும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார் நளினி.ஏப்ரல் 22–ந்தேதி திருப்பதியில் வைத்து நளினியைத் திருமணம் செய்து கொண்டேன். பல்வேறு நெருக்கடிகள் காரணமாக எங்கள் திருமணத்தை ரகசியமாக வைக்க வேண்டியிருந்தது.இந்நிலையில், மே21–ந் தேதி ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், அதிர்ச்சியும் குழப்பமும் சரிவிகிதத்தில் என்னைத் தாக்கின.ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் தாணு படம் பத்திரிக்கைகளில் வெளியானபோது பீதியில் நானும், நளினியும் உறைந்து விட்டோம்.நளினி தம்பி பாக்கியநாதனை சி.பி.ஐ கைது செய்தது. நானும் நளினியும் மீண்டும் திருப்பதி சென்றோம். தற்கொலை செய்து கொள்ள நானும் நளினியும் முடிவு செய்திருந்தோம்.என்னிடம் இருந்த சயனைடு குப்பி தண்ணீரில் நனைந்து பாழாகி விட்டதால், புதிய சயனைடு குப்பி கேட்டிருந்தேன்.ஆனால், திருப்பதியில் நளினி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. அதனால் மீண்டும் விழுப்புரம் திரும்பினோம். சைதாப் பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கிய எங்களை கைது செய்தனர். சில நாட்களில் எனக்கு, 'மொட்டைத் தலை' முருகன் என பெயர் வைத்தார்கள். ரொம்ப வேடிக்கையான பெயர் தான்.விசாரணை கைதியாக செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது நளினி ஐந்து மாதக் கர்ப்பிணி. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நளினியை நான் பார்த்த போது, நடக்க முடியாமல் தரையில் தவழ்ந்து வந்தார். 'எனக்கு சாப்பாடு பத்தலை. ரொம்ப பசிக்குது. இப்படியே விட்டா என் பிள்ளை செத்துப் போகும்' எனக் கதறினார்.சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து நளினிக்கு போதிய உணவு கிடைக்கச் செய்தேன். குறித்த தேதிக்கு முன்னதாகவே நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பலவீனமாக இருந்தார்கள். மாற்றுத் துணியோ, உணவோ எதுவுமே எங்களுக்கு இல்லை.ஒவ்வோரு இரவிலும் நளினி அனுபவித்த அந்தத் துன்பம் என்னால் வந்தது என்று இப்போதும் நினைத்து நினைத்து அழுகிறேன்.சிறை அதிகாரி ஒருவர் நளினியின் நிலையைப் பார்த்து குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுத்தார். சிறைக்கு வந்த பேரறிவாளனின் அப்பா குயில்தாசன் குழந்தை அரித்ராவுக்கு கொசுவலை வாங்கிக் கொடுத்தார். கேட்க அது சாதாரணமாக இருக்கும். ஆனால், அது அப்போது மிகப் பெரிய உதவி.அரித்ராவுக்கு இரண்டரை வயதான போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றினார்கள். அங்கே, பசு மாட்டை ஆச்சரியமாகப் பார்த்த அரித்ராவின் எதிர்காலம் குறித்து நளினிக்கு அச்சம் ஏற்பட்டது.எங்கள் வழக்கிலேயே சக சிறைவாசியாக இருந்த சுசீந்திரனின் தாயார் அரித்ராவை கோவையில் வைத்து வளர்த்தார். சில ஆண்டுகள் கழித்து ஈழம் சென்ற அரித்ரா, பிறகு லண்டன் சென்றாள். தற்போது அவளுக்கு வயது 22.இன்றும் பாதுகாப்பு என்ற பெயரில் தனிமைச் சிறையில் தான் நானும், நளினியும் வாழ்ந்து வருகிறோம். ஆறு அடி தூர இடைவெளியில் 10 பேர் சூழ்ந்து நிற்க தான் நானும், நளினியும் பேசிக் கொள்வோம்.நீண்ட கால சிறைவாசிகளுக்கு செவித்திறன் பாதிக்கப்படும். ஆம், எனக்கும், நளினிக்கும் செவித்திறன் பாதிப்பு உள்ளது. செவித்திறன் பாதிக்கப்பட்ட இருவர் ஆறு அடி இடைவெளியில் என்னப் பேசிக் கொள்ள முடியும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.வாழ்வின் எந்தச் சந்தோஷங்களையும் காணாத எனது வாழ்வில், ஒரு வானவில்லைப் போல மின்னி மறைந்த நளினியுடனான காதல் நினைவுகள் மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கின்றன.இவ்வாறு முருகன் கூறியுள்ளார்.... 

Tuesday, February 18, 2014

ஆண்களின் காதல்

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான். 

அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள் . 

அவன் "நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான் .

ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது .

அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா" ? 

அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி . 

அந்த பையனுக்கு பார்வை இல்லை.

அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.

சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் .

" என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ "

அந்த வாழைபழம் தான் இது

மரபணு மாற்றப்பட்ட மஞ்சள் வாழைப்பழம் : அதிர்ச்சி தகவல்

வாழைப்பழம்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமான வாழைப்பழம் இப்போது சாபமாக மாறி வருகிறது.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள் பூம்பழம், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி, செவ்வாழை ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். இவை ஒவ்வொன்றும் உடல் நலனுக்கு நன்மை செய்பவை.

இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் வயிறு கோளாறு இருப்பவர்களும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று ஞாபகமாக எச்சரித்து அனுப்புகிறார்கள்.

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன் என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

குழந்தைகளுக்கோ உறவினர்களுக்கோ வாழைப்பழம் வாங்க போகும் போது இந்த பெரிய வகை மஞ்சள் பழங்களை வாங்காதீர்கள். நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

**************

Tamil GK தமிழ் பொது அறிவு

1.பசிபிக் பெருங்கடலின் சாவி என அழைக்கப்படும் நகரம் சிங்கப்பூர்

2.இந்தியாவின் தேசிய நீர் வாழ் உயிரினம் கான்ஜெட்டிக் டால்பின்

3.நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் குஜராத்

4.இந்தியாவில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட முதல் அறிவியல் பூங்கா வண்டலூர்

5.மிசோரம் மாநிலத்தில் அதிக அளவில் நாரில்லா இஞ்சி உற்பத்தியாகிறது

6 .விக்டோரியா பாலைவனம் அமைந்துள்ள இடம் ஆஸ்த்ரேலியா

7.நவீன இயந்திர ரோபாவின் தந்தை யார்?
ஐசக் அசிமோ

8.ஆசியாவின் மிகப்பெரிய 2 வது மஞ்சள் சந்தை எது?
ஈரோடு

9.காஷ்மீரின் கடைசி மன்னர் யார்?
ஹரிசிங்

10.உலகின் மிகவும் பழமையான மரமாக கருதப் படுவது எந்த மரம்.?பேரீச்சை மரம்

நான் உங்களை நம்பி தான் இருக்கேன்..


10 மணிக்கு எல்லாம் கடையை குளோஸ் பண்ணிடறாங்க. 

பீர் கூலிங்கா கிடைக்கறதே இல்ல. 


இப்போ எல்லாம் யாரும் பிராண்ட் பேரை சொல்லி சரக்கு வாங்குவது இல்ல 70 ரூபா குவாட்டர் 80 ரூபா குவாட்டர்னு சொல்லி தான் வாங்கறாங்க. 

ஒரு தடவை வாங்கும் பிராண்ட் அடுத்த தடவை கிடைக்கிறது இல்ல. 

சரி பாண்டி போய் வாங்கிட்டு வந்தாலும் வண்டியை புடிச்சி சரக்கை புடிங்கி வச்சிக்கறாங்க.

நீங்க தான் எதாவது நடவடிக்கை எடுக்கனும் 

நான் உங்களை நம்பி தான் இருக்கேன்...

Monday, February 17, 2014

திருச்சி மாநாட்டில் தி.மு.க தேர்தல் நிதி

திருச்சி மாநாட்டில் தி.மு.க.விற்கு வசூலான மொத்த தேர்தல் நிதி - 106,79,88,933 ரூபாய்.

முதல் இடம் - திருவண்ணாமலை - 7,22,77,777

இரண்டாம் இடம் - திருவள்ளூர் - 7,11,00,000

மூன்றாம் இடம் - காஞ்சிபுரம் - 6,07,00,000.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கவே இந்த மாநாட்டு ட்ராமா? கோடி கோடியா கொடுக்கற அளவுக்கு இங்கே சாதாரண தொண்டன்கிட்டே என்ன இருக்கு?
வெள்ள நிதி , புயல் நிதி , புகம்ப நிதி , இதெல்லாம் தமிழ் நாட்டு அரசியல் வியாதிகளிடம் கேட்ட 10,000 , 20,000 , கொடுப்பாங்க ,,,, தேர்தல் நிதின்னு சொன்ன மட்டும் கோடி கணக்குல கொடுப்பாங்க இவ்வளவு பணம் எங்கிறந்து வருதுன்னு தெரியல ...

பெண்ணே வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள்

பெண்ணே உங்கள் வருங்கால கணவர்

1. கார் வைத்து இருக்க வேண்டும்,

2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),

3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,

4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,

5. அக்கா தங்கை இருக்க கூடாது,

6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும்

7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)

8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,

9. பிட்டாக இருக்க வேண்டும்,

10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),

11.கெட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,

இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?
மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.
காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.
இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.

Sunday, February 16, 2014

‘சேதுபதி’ மன்னர்

ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் 'தேவர்கள்' என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக 'சேதுசமுத்திரம்' எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே 'சேதுபதி' மன்னர் என்ற பெயரும் பெற்றார்
பகிர்தல் : இராமேஸ்வரம் மறவர்கள்--அகில இந்திய ஃபார்வட் ப்ளாக்--தேவர் மாவட்டம் ,தென்னாடு

Friday, February 14, 2014

இங்கிலாந்து சகோதரர்களின் மொத்த வயது 855 ஆண்டுகள்: கின்னஸ் சாதனைக்கு தகுதி UK siblings with combined age of 855 years world oldest family

லண்டன், பிப். 11-

லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 சகோதரர்களின் வயதுக் கூட்டுத்தொகை 855 வருடங்கள். இந்த குடும்பம் உலகத்தின் மூத்த குடும்பம் என கின்னஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் மிடில்ஸ்பிரக் நகரில் வசித்து வரும் 68 முதல் 89 வயதுள்ள புருட்நெல் சகோதரர்கள் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள். ராபர்ட் (68), ஜான் (69), ஜீன் (71), மேரியன் (74), ஜேம்ஸ் (76), வின்சென்ட் (78), மே (79), மேரி (80), வின்பிரெட் (83), வில்லியம் (88) மற்றும் பெர்னாடெட்டி (89) ஆகிய இந்த சகோதர-சகோதரிகள் சிறு வயதில் இருந்ததைப் போலவே இப்போதும் இணைந்திருக்கிறார்கள்.

இதுபோன்று அதிக வயதுள்ள சகோதரர்கள் கொண்ட எந்த ஒரு குடும்பம் பற்றிய தகவலும் இதுவரை வரவில்லை என்று கின்னஸ் உலக சாதனை கமிட்டி கூறியுள்ளது. இதற்கு முந்தைய சாதனையாக, 9 சகோதரர்களின் வயது கூட்டுத்தொகை 828 ஆண்டுகளாக இருந்தது. எனவே, இந்த சாதனையை முறியடிக்க தகுதி பெற்றுள்ள புருட்நெல் குடும்பம், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பிக்கலாம் என்று கின்னஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா காட்டிய புதிய காதல்கள் - காதலர் தின ஸ்பெஷல்!


தமிழ் சினிமா காட்டிய புதிய காதல்கள் - காதலர் தின ஸ்பெஷல்!!

valentines day special - Tamil cinema love movies

காதல் இல்லாத தமிழ் சினிமாவே கிடையாது. பக்தி படமானாலும், புராண படமானாலும், சரித்திர படமானாலும் அவ்வளவு ஏன் கார்டூன் படமாக இருந்தாலும் கட்டாயம் காதல் இருக்கும். சில தமிழ் படங்களைப் பார்த்த ஹாலிவுட் டைரக்டர் ஒருவர் "உங்களுக்கு ஐ லவ் யூ சொல்வது மட்டும்தான் பிரச்னையா?" என்று கேட்டார். அந்த அளவுக்கு காதலை கதற கதற காட்டியிருக்கிறது தமிழ் சினிமா. சினிமா காட்டிய சில வித்தியாசமான காதல்களை கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போம்.

தேவதாஸ் காதல்

காதல் வகையிலேயே அதிகம் பேமஸ் ஆனது தேவதாஸ் காதல்தான். காதலி உயிருடன் கல்லறையில் புதைக்கப்பட காதலில் தோற்ற நாயகன் தாடி வைத்துக் கொண்டு தண்ணி அடித்துக் கொண்டே செத்த காதல். காதலில் தோற்றவர்கள் தண்ணி அடிக்க வேண்டும். தாடி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது இந்த தேவதாஸ் காதல்.

அபூர்வ காதல்

அம்மா வயதுள்ளவரை மகன் வயதுள்ளவர் காதலிப்பதும், அப்பா வயதுள்ளவரை மகள் வயதுள்ளவர் காதலிப்பதும் அபூர்வராக காதல். இதை சொன்னவர் பாலச்சந்தர். நல்ல வேளையாக இந்த இரண்டு காதலையும் அவர் சேர்த்து வைக்க வில்லை. அப்படி வச்சிருந்தால் நிஜத்துலேயும் இந்த அபூர்வ காதல் செழித்து வளர்ந்திருக்கும்.

பள்ளிக்கூட காதல்

காதலிக்கிறதுக்கு ஒரு வயசு வேண்டும், ஒரு தகுதி வேண்டும் என்பதை உடைத்து பத்தாம் வகுப்பு படிக்கும்போதே காதலிக்கலாம் என்று பள்ளிக்கூட காதலை அறிமுகப்படுத்தியது பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை. இன்றைய சினிமாவின் பள்ளி காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பாரதிராஜா. பள்ளிக்கூட சீருடை அணிந்து காதலிப்பது மாதிரி காட்சிகள் வரும்போது மனசு கிடந்த பதறுது பலருக்கு.

மழலை காதல்

பள்ளிக்கூட காதலாவது பரவாயில்லை தங்க பச்சான். அஞ்சாப்பு படிக்கும்போதே காதலிக்க கற்றுக் கொடுத்தவர். அழகி படத்தில் அவர் ஆரம்பித் வைத்த இந்த மழலை காதல் நேற்று வந்த உ படம் வரை தொடர்கிறது.

பார்க்காமலே காதல்

காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்வாங்க. அதையே மாற்றி காதலிக்கிறதுக்கு பார்க்ககூட தேவையில்லை. பார்க்காமலேயே காதலிக்கலாமுன்னு சொல்லிக் கொடுத்தார் அகத்தியன். காதல் கோட்டையில் அஜீத்தும், தேவயானியும் பார்க்காமலேயே காதலிச்சு கடைசி நேரத்துல ரெயில் நிலையத்துல சேர்ந்ததை லிட்டர் கணக்கில் கண்ணீர் வடிச்சு ரசிச்சு ரசிச்சு பார்த்தோம்.

அலைபாயுதே காதல்

காதலில் இது தனி வகை. அதாவது வீட்டுக்கு தெரியாம தாலிகட்டி குடும்பம் நடத்துற காதல். அடிக்கடி பத்திரிகையில் அலைபாயுதே பாணியில் என்று பல காதல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். இந்த காதலை கண்டுபிடித்து சொன்னவர் மணிரத்னம்.

தற்கொலை காதல்

காதல் கைகூடி வரவில்லையா ஆத்துலேயோ, குளத்துலேயோ விழுந்து செத்துடணும். ஏக் துஜே கேலியேவும், புன்னகை மன்னனும் கற்றுக் கொடுத்தது. கொஞ்ச காலம் சினிமா காதலர்கள் இப்படித்தான் செய்தார்கள். 80 களில் ஊட்டி சூசைட் பாயிண்டில் இருந்து தொப்பு தொப்புன்னு விழுந்து காதலர்கள் செத்துக்கிட்டிருந்தாங்க. இப்பதான் கொஞ்சம் குறைஞ்சிருக்கு.

அழுக்கு காதல்

இப்போ உள்ள சினிமா கண்டுபிடிச்சது இந்த அழுக்கு காதலை. காண்வெண்ட்டில் படித்து ஐ.டியில வேலை பார்த்தாலும் கூடவே ஸ்மார்ட்டா இருக்கிற பையனை ஏறிட்டும் பார்க்காமல் கட்டச்சுவர்ல உட்கார்ந்துகிட்டு நண்பர்களோட அரட்டை அடிச்சிக்கிட்டு பீடி குடிக்கிறவனைத்தான் காதலிப்பாங்க. அதிலும் லுங்கியும், கட்டம்போட்ட சட்டையும் போட்ட ஆளைப் பார்த்தாலே காதல் பொங்கி வழிஞ்சிடும்-.

சைக்கோ காதல்

பொண்ணு தெளிவாத்தான் இருக்கும். ஆனா தெளிவில்லாம சைக்கோவா திரியுறவனை காதலிக்கும், இல்லேன்னா பல கொலைகளை பண்ணினவத்தான் பிடிக்கும். அவனை கல்யாணம் பண்ணிகிட்டு இவள் திருத்திவிடுவாளாம். அவனும் காதல் வந்த பிறகு எல்லாத்தை விட்டுவிட்டு நல்லவனாகி விடுவானாம். கோர்ட்டும் ஹீரோ செஞ்சது எல்லாமே மக்கள் நலனுக்காகத்தான்னு சொல்லி ரிலீஸ் பண்ணிடும்.

இப்படி நம்ம தமிழ் சினிமா காட்டிய காதல் எக்கச்சக்கமா இருக்கு. இதுல நீங்க ரசித்து பார்த்த காதலையும், வெறுத்து ஓடின காதலையும் கமெண்டுல போடுங்க. காதலர் தினத்தை கொண்டாடுங்க பாஸ்...

Thursday, February 13, 2014

சகோதரிகளின் கவனத்திற்கு.....!!

சகோதரிகளின் கவனத்திற்கு.....!! 

அனைவரும் அவசியம் படிக்கவும்....

ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று...

டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.

என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன் என்றாள்.

டாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ? என்றார்.

அவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன் என்றாள்.

டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை என்றார்.

தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார் என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

டாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார்.

உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார்.

அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம் என்றாள். 

ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன ? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன ? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி என்றார்.

அந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.

நன்றி : சங்கை ரிதுவான்.

கல்விக் கடன் வாங்கியவர்கள் பெயரை வெளியிடக்கூடாது: வங்கிகளுக்கு அறிவுறுத்தல் Banks asked not to display names of education loan defaulters

Img கல்விக் கடன் வாங்கியவர்கள் பெயரை வெளியிடக்கூடாது: வங்கிகளுக்கு அறிவுறுத்தல் Banks asked not to display names of education loan defaulters

சண்டிகார், பிப்.13-

பஞ்சாபில் உள்ள வங்கிகளிடம் கல்விக்கடன் பெற்று அதை திரும்ப செலுத்த தவறியவர்களின் பெயர்கள் மற்றும் போட்டோக்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நிதியியல் சேவைத்துறை, நிதி அமைச்சகம், மாநில வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டம் நடந்தது. அதில், கல்விக்கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் போட்டோக்கள் வெளியிடும் சில வங்கிகளின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என கூறப்பட்டுள்ளது.

கடன் கட்டாமல் நிற்கும் மாணவர்களின் சூழ்நிலைகளை தெரிந்து கொள்ளாமல், அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் வங்கிகள் இவ்வாறு செய்ல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இனிமேலாவது வங்கிகள் இவ்விஷயத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும். வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கல்விக் கடன் கேட்பவர்களின் சொத்துக்களை வருடந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாபில் 2013 டிசம்பர் 31ந் தேதி வரை ரூபாய் 1,065.09 கோடி அளவுக்கு கல்விக் கடன் நிலுவையில் உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
...

மூழ்கிப் போன உண்மைகள்



மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!! தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே ! இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே ! முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் ! நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் ! தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் . நன்றி

Monday, February 10, 2014

பட்டை சோறு உண்பது ஒரு சுகம்

நம் தலைமுறையின் வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம் ... பட்டை சோறு உண்பது.

எவர்சில்வர் பாத்திரம்கள்.. அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண.. உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது..

தோட்ட வேலை செய்வோருக்கு.. வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படும்.. பாத்திரம்கள் அதிக எண்ணிகையில்.. இருக்காது..

அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி.. மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி.. நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி .குழி ஏற்படுத்தி.. தும்பு பகுதி.. அதே ஓலையால் கட்டப்படும்.. இன்னொரு சிறுதுண்டு ஓலையை மடக்கி ஸ்பூனாக செய்து பயன்படுத்துவார்கள்.. சுற்றுலா செல்வோரும்.. கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும்.. இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்

இதில் சாப்பிடும்போது.. ஓலையின் மணமும் இணைந்து ஒரு திகட்டாத புது சுவையை தரும்.. அதிக உணவு சாப்பிடத் தோன்றும்.

Sunday, February 9, 2014

முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம்

பசும்பொன் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம் ஜெயலலிதா அணிவித்தார்

தேசிய தலைவர் என்று அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அக்டோபர் மாதம் கடைசியில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற்று வருவது வழக்கம். இதுதவிர அரசியல் கட்சிகள் சார்பிலும் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 2010–ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பசும்பொன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும் பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்படும் என ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார். அதனை நிறைவேற்றுவதற்காக அவர் இன்று பசும்பொன்வந்தார்.

இதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பகல் 12.35 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் கலெக்டர் சுப்பிரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா, போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மாநகராட்சி கமிஷனர் கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 1.30 மணிக்கு பசும்பொன் வந்தார். அங்கு அமைச்சர்கள், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் ஐ.ஜி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு வந்தார். அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த தங்க கவசத்திற்கு புனித நீர் ஊற்றினார். அதன்பிறகு ரோஜா மலர்களை தூவினார். அதை தொடர்ந்து தங்க கவசங்களை கோவை காமாட்சிபுரி ஆதீனத்திடம் ஜெயலலிதா வழங்க, அதனை முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அவர் அணிவித்தார். அதன்பின்னர் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு முத்துராமலிங்கத்தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஹெலிகாப்டரில் மதுரை புறப்பட்ட அவர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முன்னதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி பசும்பொன்னில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, சுந்தரராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

ஜெயலலிதாவை வரவேற்க மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் பசும் பொன் வந்து குவிந்தனர்.

"வீரம் என்ற குணம் தான் எதிரியும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது."
 

Saturday, February 8, 2014

Dont fall in love

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும்
உன்னிடம் நிலைப்பதில்லை
உன்னை புரிந்து கொண்ட எதுவும்
உன்னை விட்டு விலகுவதுமில்லை..!!நான் மௌனமாக இருக்க நினைத்தபோதெல்லாம் என்னை பேசவைத்தாய் நான் பேசவேண்டும் என்று நினைக்கும்போதோ என்னை மௌனமாக்கிவிட்டு சென்றுவிட்டாய் .

Friday, February 7, 2014

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா



வேளாண்மை, 

புராதனத் தொழில் - இன்று
புறக்கணிக்கப்பட்ட தொழில்....
காய்ந்து வெடித்த 
வயல் வெளிகளும் - அதனால்
அழுது அழுது
ஓய்ந்து துடித்த
கயல் விழிகளுமாய்
முப்போகம் விளைந்த பூமி - இனி
எப்போது விளையும் என்ற
ஏக்கப் பெருமூச்சுமாய்
உழவர்களின் வாழ்க்கை!
வேளாண்மை செய்பவனை
மேலாண்மை செய்பவன்
மிதிக்கிறான்,
மேலாண்மை செய்பவனை
வேளாண்மை செய்பவன்
துதிக்கிறான்.
பழக்கப்பட்டவரிடம்
சோகத்தைச் சொல்லி அழுவதை
வழக்கமாகக் கொண்டவர் நாம்!
பாவம் உழவன்
மண்ணோடு பாதி நாள்
மாடுகளோடு மீதி நாள்
சோகத்தை யாரிடமாவது
சொல்லி அழலாமென்றால்
உறவென்று யாரும்
ஒட்டுவதில்லை.
உழுது முடித்த சனம்
அழுது முடிக்கும் முன்னே
பொழுது முடிந்துவிடும்
நாளை என்ற நம்பிக்கையில்
நாளைத் தள்ளும் நாடகமே
நடைமுறை!
வேரோடு வேராக
வளரும் பயிருக்குள்
ஒன்றி விடும் உழவர்கள்.....
வயிறு ஒட்டி
சோகம் அப்பி
தேகம் மெலிந்த
இவர்கள் தான் - இந்த
தேசத்தின் வேர்களாம்?
நீர்வீழ்ச்சியை இரசிக்கலாம்
வேருக்கு வீழ்ச்சியென்றால்
எப்படியடா ரசிப்பது?
கார் இல்லையென்றால்
கால்கள் இருக்கின்றன;
விமானம் இல்லையென்றால்
அவமானம் இல்லை.
தானியம் இல்லையென்றால்
சூனியம் தானடா!
இருந்தாலும் இங்கே
கழனிகள் எல்லாம்
மதிப்பிழந்தாச்சு;
கணினிகள் மட்டும்
மதிப்புப் பெற்றாச்சு....
குறுக்கு வலிக்க
உழைத்தக் கூட்டம்
குடிசையை விட்டு உயரவில்லை;
குறுக்கு வழியில் 
பிழைத்தக் கூட்டம்
கோடிகள் சேர்க்க அயரவில்லை.
பெற்ற சம்பளம் போதவில்லை
என்பதோடு மட்டுமே
நின்றுப்போனது
கற்றறிந்தோர் போராட்டம்.
விவசாயக் கூலிகளின் 
வேதனைப் பற்றியும்
விவசாயிகள் வேதனை பற்றியும்
அவரவர் அன்றி
வேறு எவரும்
கவலை கொள்ளார்.
கலப்பைகள்கூடக்
கவலை கொள்ளும் - இவர்
களைப்பறியா உழைப்பு கண்டு!
கள்ளிச் செடியும்
கலவரம் கொள்ளும் - அந்தக்
காய்ந்த நிலப்பரப்பைக்
காண நேர்ந்தால் 
அதிலும்
நம்பிக்கை விதைத்து
கனிகள் விளைவித்து
உயிர் வாழ்வை
உறுதி செய்தோரின்
உயிர் வாழ்க்கை
உத்திரவாதமின்றி
ஊசலாட்டத்தில்.....
கலப்பை மாறி "டிராக்டர்" ஆச்சு
கமலை மாறி "மோட்டார்" ஆச்சு
விதைகள் மாறி "வீரியம்" ஆச்சு
விவசாயிகள் வாழ்க்கை மட்டும்
வீழ்ந்திடல் ஆச்சு
விளைபொருள் கூட
கூர்த் தீட்டிய
கொலைக் கருவியாய்
விவசாய இறக்குமதியில் இன்று?
இத்தனை சோகமும்
பார்த்த பின்னும்
காலம் மறந்து
கண்மூடி வாழ்ந்து
மரித்த பின்
மண்மூடிப் போகவா
வாழ்க்கை?

Popular Posts